About Me

My photo
Tirupur, Tamil Nadu, India
B with me if u wanna kno abt me...

Sunday, September 26, 2010

இது ஒரு காதல் கதை...


அழகி, நீ 12B-ல் செல்லும் டைம்மில் கிங் நான் சாமுராய் பைக்கில் செல்லும் பொழுது உன்னைப் பார்த்தேன் ரசித்தேன். அன்று முதல் நானும் உன்மேல் காதல் கொண்டேன். அன்று ஒரு நாள், திருமலை சாமி கோவிலில் நான் உன்னைக் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் . உன்னிடம் எனது காதலை சொல்ல புறப்பட்ட எனக்கு, காதலுக்கு மரியாதை செய்கிற எனது பிரெண்ட்ஸ் குட்லக் சொல்லி அனுப்பினார்கள். ஹலோ மின்னலே, "ஏய் நீ ரொம்ப அழகா இருக்க" என்று சொல்லும்பொழுது, நீயும் "ஐ லவ் யூ டா" என்றாய். என் கண்ணுக்குள் நிலவே, என் சுவாசக் காற்றே, பிரியமானவளே, ரோஜாக்கூட்டம் நிறைந்த ரோஜாவனம் அதில், என்னுடைய ட்ரீம்ஸில் நிறைந்த பூவே உனக்காக, காதல் மன்னன் ஆன ஷாஜஹான் நான் காதல் கோட்டையான தாஜ்மகாலைக் கட்ட விரும்பிகிறேன். லவ்லி, நீ என் மனதில் இருக்கையில், இந்தக் காதல் தேசத்தில் அந்த வானம் வசப்படுமே எனக்கு. முள்ளில்லாத ரோஜாவே, உன்னைப் பார்த்தால், என் துள்ளாத மனமும் துள்ளும். நாம்க் களவாடிய பொழுதுகளை நினைக்கும்பொழுது, ரசிகன், என் மனசெல்லாம் தித்திக்குதே. அது ஒரு கனாக்காலம். அதில், நமது டும் டும் டும் ரன்னாவது போலக் கனாக் காங்கிரேனடித் தோழி.

இவன்,
உன் அழகில் மயங்கிய
ஆயிரத்தில் ஒருவன்...

-- $கார்த்திக் சிவா$

Friday, September 24, 2010

மென்மை


இம்மலர் இதழ்களின் மென்மையை உணர்ந்தேன்...
உன் மீது கொண்ட காதலில் அல்ல...
என் கல்லறையின் மீது உள்ள புட்களில்...


-- $கார்த்திக் சிவா$

Sunday, July 11, 2010

பீனிக்ஸ்...



மின்விளக்கைத் தொட்டுப் பார்க்க நினைக்கும்
அந்த விட்டில் பூச்சிக்கோ இறப்பு ஒருமுறை...
ஆனால், சுட்டெரிக்கும் சூரியனை உரசிப் பார்க்கத் துடிக்கும்
அந்த பீனிக்ஸ் உயிர்த்தேளுவதோ பலமுறை...
எண்ணங்களும் முயற்ச்சிகளும் உயர்வாக இருந்தால்,
வெற்றியும் உயர்ந்ததாகவே இருக்கும்...

-- $கார்த்திக் சிவா$

Wednesday, July 7, 2010

காதல் மட்டும் வேண்டாம்...


எனக்குத் தாகம் எடுத்தால்
நீ நீர் அருந்துவாய்...
எனக்குப் பசி எடுத்தால்
நீ உணவு உண்பாய்...
எனக்கு உறக்கம் வந்தால்
நீ படுத்து உறங்குவாய்...
நான் படித்தால்
நீ தேர்வு எழுதுவாய்...
நான் உன்னைக் காதலித்தால்
நீ திருமணம் செய்வாய்...
என்னை அல்ல வேறொருவனை...?!

-- $கார்த்திக் சிவா$

விண்மீன்...


உன்னைத் தொட்டுத் தழுவுவேன்
நீ மெல்லிய மலரானால்...
உன்னை அள்ளிப் பருகுவேன்
நீ மனக்கும் பண்நீரானால்...
உன்னை வாரி எடுத்திடுவேன்
நீ சிந்திய முத்தானால்...
ஆனால், நீயோ சிதறிய விண்மீன்
உன்னை நெருங்கினாலே நான்
நெருப்புப் பிழம்பாகிடுவேனே...!

-- $கார்த்திக் சிவா$

Tuesday, July 6, 2010

நண்பர்கள்...


கடந்து வந்த பாதையில்
உடன் பயணித்தவர்கள் பலர்...
ஆனால், நாம் கடக்கவிருக்கும்
பாதையை அறிந்தவர் எவரும் இலர்...
உறுதி இல்லாத எதிர்காலத்தில்
உறுதுணையாய் இருப்பவர்கள் சிலர்...
நண்பர்கள்...
-- $
கார்த்திக் சிவா$