அழகி, நீ 12B-ல் செல்லும் டைம்மில் கிங் நான் சாமுராய் பைக்கில் செல்லும் பொழுது உன்னைப் பார்த்தேன் ரசித்தேன். அன்று முதல் நானும் உன்மேல் காதல் கொண்டேன். அன்று ஒரு நாள், திருமலை சாமி கோவிலில் நான் உன்னைக் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் . உன்னிடம் எனது காதலை சொல்ல புறப்பட்ட எனக்கு, காதலுக்கு மரியாதை செய்கிற எனது பிரெண்ட்ஸ் குட்லக் சொல்லி அனுப்பினார்கள். ஹலோ மின்னலே, "ஏய் நீ ரொம்ப அழகா இருக்க" என்று சொல்லும்பொழுது, நீயும் "ஐ லவ் யூ டா" என்றாய். என் கண்ணுக்குள் நிலவே, என் சுவாசக் காற்றே, பிரியமானவளே, ரோஜாக்கூட்டம் நிறைந்த ரோஜாவனம் அதில், என்னுடைய ட்ரீம்ஸில் நிறைந்த பூவே உனக்காக, காதல் மன்னன் ஆன ஷாஜஹான் நான் காதல் கோட்டையான தாஜ்மகாலைக் கட்ட விரும்பிகிறேன். லவ்லி, நீ என் மனதில் இருக்கையில், இந்தக் காதல் தேசத்தில் அந்த வானம் வசப்படுமே எனக்கு. முள்ளில்லாத ரோஜாவே, உன்னைப் பார்த்தால், என் துள்ளாத மனமும் துள்ளும். நாம்க் களவாடிய பொழுதுகளை நினைக்கும்பொழுது, ரசிகன், என் மனசெல்லாம் தித்திக்குதே. அது ஒரு கனாக்காலம். அதில், நமது டும் டும் டும் ரன்னாவது போலக் கனாக் காங்கிரேனடித் தோழி.
இவன்,
உன் அழகில் மயங்கிய
ஆயிரத்தில் ஒருவன்...
ஆயிரத்தில் ஒருவன்...
-- $கார்த்திக் சிவா$